கட்டுக்கதையான விவாகரத்து சர்ச்சை!! கணவருடன் சேர்ந்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய்..

கட்டுக்கதையான விவாகரத்து சர்ச்சை!! கணவருடன் சேர்ந்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய்..

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று தற்போது மற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு வருகிறது. இதில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். அங்கு சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் கைகோர்த்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முன்னாள் காதலர்களான சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் போன்ற வதந்திங்கள் சமூக வலைத்தளங்களில் வர தொடங்கியது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறி வருகிறார்கள். அதேசமயம் தன் கணவர் அபிஷேக் பச்சன் குடும்பத்துடன் வருகை தராமல் தன் மகள் ஆராத்யாவுடன் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டார்.

ஏற்கனவே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது. தற்போது கணவருடன் பிரிந்து திருமணத்தில் கலந்து கொண்டதை பார்த்த பலர், விவாகரத்து கன்ஃபார்ம்-ஆ என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், தன் கணவர் அபிஷேக் பச்சன் பக்கத்தில் உட்கார்ந்தி பேசியிருக்கிறார்.

அபிஷேக் பச்சன் பக்கத்தில் நடிகை ஹிருத்திக் ரோஷனும் இருக்கிறார். இந்த வீடியோ மூலம் இருவரும் பிரியவில்லை ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES