போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!

போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!

அடுத்தடுத்து திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து சொத்து தகராறு காரணமாக தனது தந்தையான விஜயகுமாருடன் சண்டையிட்டு நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதன் மூலமாக வனிதா விஜயகுமார் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகளான வனிதா விஜயகுமார் அந்த குடும்பத்திலிருந்து தற்போது ஒதுக்கப்பட்ட விட்டார்.

அதற்கான காரணம் அவர் விஜயகுமாருடன் சொத்துக்காக சண்டையிட்டது தான். அதை அடுத்து இவரது திருமண வாழ்க்கை என எடுத்தோமானால் முன்னதாக 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதை அடுத்து 2007 ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2010 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் தனிமையில் தனது மகள் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார் வனிதா விஜயகுமார். அவருடைய மகன் ஸ்ரீஹரி வனிதாவுடன் நான் வரமாட்டேன் என அழுது அடப்பிடித்து தன்னுடைய தாத்தாவான விஜயகுமார் உடன் தான் அவர் வளர்ந்து வருகிறார்.

இப்படியாக இரண்டு மகள்களுடன் வனிதா வாழ்ந்து வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது. வயது வந்த பெண்கள் இரண்டு பேர் இருக்கும்போது இந்த வயசில் உங்களுக்கு திருமணம் அவசியமா? என பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

ஆனால், அவரோ அதை பற்றி எல்லாம் கவலை கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. குடி போதைக்கு அடிமையாகி உடல் நலம் சீரழிந்து திடீரென மரணித்து விட்டார் .

இதை எடுத்து திருமணம் செய்யாமல் இருந்து வரும் வனிதா விஜயகுமாருக்கு தற்போது 43 வயதாகிறது .இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற்று வருகிறார். மேலும் சொந்தமாக YouTube சேனல் வைத்து அதில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றுவதன் மூலம் அதிலும் வருமானம் குவிந்து வருகிறது .

இதையடுத்து தனது மகளான ஜோவிகாவையும் அவர் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துவிட்டார். தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் காமிட்டாகி வருகிறார் வனிதா விஜயகுமார்.

வனிதா தற்போது தண்டுபாளையம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து சோனியா அகர்வால் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வனிதாவிடம் தொகுப்பாளர்… நீங்கள் திடீரென பவர் ஸ்டார் உடன் திருமணமான புகைப்படத்தை போடுறீங்க…

இப்போ விஜய் டிவி கோபிநாத் உடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு இருக்கீங்க… எதை நம்புறது என்று எங்களுக்கு தெரியவில்லையே என கிண்டலாக கேட்டதற்கு…கோபிநாத் சாருடன் நான் அதில் கர்ப்பமாகவில்லை.

அந்த கதையே வேற…. ஆனால், அது மிகவும் அழகான மிகவும் போல்டான கேரக்டர். ஏற்கனவே அந்த கேரக்டர் மலையாள படம் ஒன்றில் வந்துவிட்டது.

இது தமிழில் தற்போது உருவாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்… மிகவும் தைரியமான ஒரு கேரக்டராக அந்த கேரக்டர் அமைந்துவிட்டது என வனிதா விஜயகுமார் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதில் கிட்டத்தட்ட நான்கு பெண்களின் வித்தியாசமான கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு பெண்களுமே கர்ப்பமாக இருப்பார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது தான் அந்த திரைப்படம். அந்த போட்டோவை போட்ட உடனேயே அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது.

நியூஸ் திறந்தாலே நான் கோபிநாத் சாரால் கர்ப்பமாகிவிட்டேன் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான் தருகிறது. இந்த வயசிலும் நான் இந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் பேசப்படுவதே கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் தான்…. என மகிழ்ச்சி பொங்க வனிதா விஜய்குமார் பேசினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES