பீரியட்ஸ் சமயத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. நீங்கள் யார்!! சீரியல் நடிகை தீபிகா ஓப்பன் டாக்..

பீரியட்ஸ் சமயத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. நீங்கள் யார்!! சீரியல் நடிகை தீபிகா ஓப்பன் டாக்..

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகள் சமீபகாலமாக வெளிப்படையாக அனைத்து விஷயங்களை பேசி வருவது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் சீசனில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்து வந்த விஜே தீபிகா கோவிலுக்கு செல்வது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் நடித்து அதன்பின் சீரியலைவிட்டு விலகினார் தீபிகா.

சமீபத்தில் அளித்த பேட்டியில், பீரியட்ஸ் சமயத்தில் கூட நான் கோவிலுக்கு செல்வேன், சாமி கும்பிடுவேன், பூஜை அறைக்கும் செல்வேன், விபூதி குங்குமம் வைத்துக்கொண்டு தான் செல்வேன். என்னை பொறுத்தவரையில் என் கடவுள் எனக்கு உடம்பு சரியில்லை என்று என்னை ஏற்றுக்கொள்வார். என்னை எப்போதும் அவர் ஒதுக்கமாட்டார்.

கடவுளே ஒதுக்காத போது என்னை ஒதுக்குவதற்கு நீங்கள் யார்? என்னிடம் அப்படி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்ற கேள்வியையும் விஜே தீபிகா அந்த பேட்டியில் கேட்டுள்ளார். மேலும், எல்லா நாட்களிலும் நான்வெஜ் சாப்பிடுவேன், சாப்பிட்டு கோவிலுக்கும் செல்வேன் என்று போல்டாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் விஜே தீபிகா.

LATEST News

Trending News

HOT GALLERIES