விஜயகாந்தை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ராதிகா.. மனதை மாற்றிய ராவுத்தர்!! பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

விஜயகாந்தை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ராதிகா.. மனதை மாற்றிய ராவுத்தர்!! பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சேவன்த் சேனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். மாண்புமிகு மாணவன், கூலி, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், முன் தினம் பார்த்தேனே, வித்தகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார். சமீபகாலமாக பேட்டிகளில் கலந்து கொண்டு யாரும் அறியாத பல உண்மை சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில், விஜயகாந்த் தன் தயாரிப்பில் படம் ஒன்றில் நடிக்க வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அவர் நடிக்கவே இல்லை. ஒருமுறை அவரை நேரில் சந்தித்த போது படம் பண்ணுவதாக இருந்தால் சொல்லுங்க? பண்ணவில்லை என்றாலும் சொல்லிவிடுங்கள், என்னை சும்மா அலையவிடாதீங்க என்று பேசிவிட்டேன். இதுபோல் யாரும் என்னிடம் பேசியதில்லை என்று விஜயகாந்த் தங்கராஜிடம் கூறியிருக்கிறார்.

அதன்பின் தான், விஜயகாந்த் பற்றி முழுசாக புரிந்த் கொண்டேன். அவரின் நல்ல மனதிற்கு CM பஸ்ஸை மிஸ் பண்ணியது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. மேலும் விஜயகாந்த்-ஐ நடிகை ராதிகா எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் கடைசியாக ஏதோ செய்து பிரேமலதாவை திருமணம் செய்து வைத்துவிட்டார். அவரது முடிவு சரியா தவறா என்று எனக்கு தெரியாது. ஆனால் விஜயகாந்தின் நல்ல மனதிற்கு அவருக்கு காதல் கைக்கூடாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டுள்ளேன் என்று மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES