“என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது தான் காரணமாம்..!

“என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது தான் காரணமாம்..!

விஜே மகாலட்சுமி ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்தார். இதனை அடுத்து சீரியல் நடிகையாக களம் இறங்கியவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.


அந்த வகையில் சீரியல் நடிப்பின் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் இடம் பிடித்த விஜே மகாலட்சுமி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் பிரபலமாக தமிழகம் எங்கும் அறியப்பட்டார்.

ஏற்கனவே திருமணம் ஆகி கையில் குழந்தையோடு வாழ்ந்து வந்த விஜே மகாலட்சுமி, தமிழ் திரை உலகின் தயாரிப்பாளர் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து பரபரப்பாக பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறினார்.

இதற்குக் காரணம் சீரியல்களில் நடிக்கும் போது சின்ன, சின்ன கிசுகிசுக்களில் சிக்கிய இவர் திடீரென திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள்.


இதனை அடுத்து அந்த ஆண்டு முழுவதும் பேசும் பொருளாக பார்க்கப்பட்ட இந்த ஜோடி பல இன்டர்வியூ கொடுத்து அசத்தியிருந்தார்கள். இதில் இருவருக்கும் இடையே உள்ள ஜோடி பொருத்தம் குறித்து நெகட்டிவாக எழுந்த கருத்துக்களுக்கு தக்க பதில் அளித்தார் ரவீந்தர்.

நட்சத்திர ஜோடிகளாக திகழும் இவர்கள் இது வரை சந்தோஷமாக வாழ்ந்து வந்ததை அடுத்து யார் கண் பட்டதோ தெரியவில்லை என்று சொல்ல கூடிய வகையில் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து அதனை அடுத்து கைதாகி சிறை சென்ற இவர் பல போராட்டங்களுக்குப் பிறகு ஜாமினில் வெளி வந்தார்.

இதனை அடுத்து மனம் நொந்து போன அவர் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து ஓரளவு உடல் நிலை தேறிய பிறகு வீடு வந்து சேர்ந்தார்.

எப்போதுமே இணைய பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இந்த ஜோடியில் தற்போது ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை மிகவும் மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்து தனது பழைய புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் என்ன இது விவாகரத்து ஆனதா? என்று கேட்க அதற்கு ரவீந்தர் எனக்கு என்று இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். நீங்கள் நினைப்பது என்றும் நடக்காது. அது சாத்தியமற்றது என்று பதில் தந்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் எந்த அளவுக்கு மகாலட்சுமியின் மீதுமா அவர் காதல் மீதும் உறுதியாக இருக்கிறார் என்பது அவர் பதிவிலேயே தெரிந்திருக்கிறது என்பதை உற்சாகத்தோடு வரவேற்று அந்த ஜோடியை பாராட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் ரவீந்திரனுக்கு ஆதரவாக பல விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து இருப்பதோடு விரைவில் ரவீந்திரருக்கு உரிய நன்மைகள் நடக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES