அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

சில நடிகைகள் அழகானவர்களாக, மிக திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களது திரையுலக பயணம், துவக்கத்தில் மிகச் சிறப்பாக அமைந்து போகப் போக மிக மோசமான பாதையில் சென்று முடிந்து விடும்.

ஏதேனும் சில சந்தர்ப்ப சூழல்களால், அந்த நடிகைகளின் திரையுலக வாழ்க்கைப் பாதையே திசை மாறி போயிருக்கும்.

குறிப்பிட்ட வயது வரைதான், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அடம்பிடிக்க முடியும். அதன்பிறகு கிடைக்கும் கேரக்டரில் நடித்தாக வேண்டும். ஏனெனில் அந்த கேரக்டரில் நடிக்கவும் ஆயிரம் போட்டிகள் இருக்கும்.

ஒரு கட்டத்தில் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு வரும்போது, நடிகைகள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சி தான். உடம்பில் எந்தளவுக்கு உடையை குறைக்க முடியுமோ, அந்தளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சம்பளத்திலும் ஏற்றி விடுங்கள் என்பதுதான் கவர்ச்சி நடிகைகள் போடும் முக்கிய ஒப்பந்தமாக இருக்கிறது.

டைரக்டர் சரண் இயக்கத்தில், சியான் விக்ரமுடன் ஜெமினி படத்தில் அறிமுகமானவர் கிரண் ரத்தோட். முதல் படத்திலேயே வடக்கத்தி பெண்ணாக வந்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து கவனிக்கும் படியான முன்னிலைக்கு வந்தார்.

ஆனால் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் படத்தில் மிக கௌரவமான ஒரு கேரக்டரில் நடிக்க வைத்த அவரே, வின்னர் படத்தில் கிரணை உரித்த கோழி போல காட்டி, அவரை ஒரு கவர்ச்சி நாயகியாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அதன்பிறகு முத்தின கத்திரிக்காய், ஆம்பள போன்ற படங்களிலும் கிரண் நடித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து சினிமாவில் கிரண் எதிர்பார்த்த வாய்ப்பு இல்லை. இதையடுத்து சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு செக்ஸ் செயலியை உருவாக்கி, அதில் பேசவும், வீடியோவில் பேசவும், நள்ளிரவில் கவர்ச்சி உடையில் வீடியோவில் பேசவும் குறிப்பிட்ட தொகைகளை கட்டணங்களாக கொண்டு வந்தார். அதில் ஏராளமான வருமானம், கோவித் 19 காலகட்டத்தில் கிரண் சம்பாதித்தார் என்ற தகவலும் உள்ளது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன் முன்னழகு, பின்னழகு, தொடையழகு, இடுப்பழகு என தனது அந்தரங்க அழகை பந்தி வைத்து புகைப்படங்களை தினமும் பரிமாறி வரும் கிரண் ரத்தோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்தது குறித்து தன் வருத்தத்தை கிரண் பதிவு செய்திருக்கிறார்.

அதில், சுந்தர் சி அழைத்தார் என்பதற்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு ஆம்பள படத்தில் நடிக்க போனேன்.. ஆனால்.. என்னை செட் பிராப்பர்ட்டி போல யூஸ் பண்ணிக்கிட்டாங்க. அந்த படத்துல எனக்கு எந்த முக்கியத்துவமும் தரலை என்று புலம்பியிருக்கிறார் கிரண் ரத்தோடு.

LATEST News

Trending News