பெண்கள் போதை.. அந்த ஊசி.. பின்னாடி குத்திட்டான்..Dora Bujji BREAKUP..! டோரா கூறிய அதிர வைக்கும் தகவல்..!

பெண்கள் போதை.. அந்த ஊசி.. பின்னாடி குத்திட்டான்..Dora Bujji BREAKUP..! டோரா கூறிய அதிர வைக்கும் தகவல்..!

இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தரங்களில் பிரபலமான டோரா புஜ்ஜி என்ற சேனலில் தோன்றும் ஹரி மற்றும் தேசராணி ஆகியோர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது.

இருவரும் ஜோடியாக வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்தன. இங்கே இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசராணி பெண்ணாகவே இருக்கக்கூடிய ஒரு பெண்.. ஆனால் ஹரி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர்.

தேசராணி ஒரு பெண், ஹரியும் இன்னொரு பெண்ணாக இருந்தாலும் ஹரியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நிறைய ஆண்களை காதலித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

ஆனால் ஹரி என்னை ஏமாற்றவில்லை. இதனால் ஹரியுடன் காதலில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் தேசராணி. இங்கே ஹரி தன்னை டோரா என்றும், தேச ராணி தன்னை புஜ்ஜி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு டோரா புஜ்ஜி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் சேனல்களை ஆரம்பித்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றனர்.

இந்நிலையில், ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்…? எதனால் நான் ஹரியை பிரிந்து விட்டேன் என்றும் கதறி அழுதபடி சமீபத்தில் வீடியோ ஒன்றை தன்னுடைய சேனலில் பதிவு செய்திருக்கிறார் தேசராணி.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஹரியை மிகவும் நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் என்னை ஏமாற்ற தொடங்கி விட்டான்.

குறிப்பாக பண விஷயத்தில் என்னை மிகவும் ஏமாற்றினான். எங்களுடைய சேனலில் ப்ரோமோஷன் செய்வதற்காக நிறைய விளம்பரங்கள் கொடுப்பார்கள். அந்த விளம்பரங்களை வீடியோவாக எடுப்பது.. பணம் கொடுக்கல் வாங்கல்.. விஷயங்கள் அனைத்தையும் ஹரி தான் பார்த்துக் கொண்டான்.

எனக்கு எவ்வளவு பணம் வந்தது..? எவ்வளவு பணம் செலவானது..? என எதுவுமே தெரியாது. நிறைய பணம் வந்திருக்கிறது என்பதை அவனுடைய வங்கி கணக்கை பார்த்த பிறகு தான் எனக்கே தெரிந்தது.

ஆனால் என்னிடம் அதைப் பற்றி எதுவும் கூறாமல் மறைத்து விட்டான். இருவரும் சேர்ந்து ஒரு கார் வாங்கினோம். அந்த காருக்கு நான் மட்டும் 5 லட்சம் ரூபாய் என்னுடைய பங்காக கொடுத்தேன்.

ஆனால் 5 லட்சம் ரூபாயை கார் நிறுவனத்தில் செலுத்தாமல் வெறும் 3 லட்ச ரூபாய் மட்டும் செலுத்திவிட்டு இரண்டு லட்ச ரூபாயை தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டான் ஹரி.

தற்போது அந்த காருக்கு EMI கட்ட சொல்லி என்னை தொந்தரவு செய்கிறார்கள். இது எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நாளுக்கு நாள் அவனுக்கு இருக்கும் போதை பழக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.வேறு பெண்களுடனும் தவறான தொடர்பு வைத்துகொண்டுள்ளான்.

போதை ஊசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு அவன் சென்று விட்டான். இது குறித்து அவனுடைய வீட்டில் நான் கூறிய பொழுது அவர்கள் என்னை செருப்பால் அடித்து அனுப்பி விட்டார்கள்.

இந்த கொடுமையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்தேன். தற்பொழுது அவனை விட்டு பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து பிரிந்து விட்டேன்.

எனவே, என்னை பழி வாங்கும் விதமாக என்னுடைய தொலைபேசி எண்ணை விபச்சாரி உடைய எண் என்று அவனுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து விட்டான். என் முகத்திற்கு முன்னாள் நேராக சண்டை போடாமல், என் பின்னால் வந்து முதுகில் குத்திட்டான்.. நிறைய பேர் எனக்கு போன் செய்து தொந்தரவு செய்தார்கள்.

இவ்வளவு வேதனைகளை நான் அனுபவித்து இருக்கிறேன். இந்த விஷயங்களை எதற்காக நான் பொதுவெளியில் பதிவு செய்கிறேன் என்றால் உங்களிடமிருந்து எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என்பதால் தான்.

எனக்கு ஆதரவு கூறுவதற்கு யாரும் கிடையாது. மனம் பாரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளை கடப்பதற்கு எனக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. எனக்கு உங்களிடமிருந்து ஆறுதலான கருத்துக்கள் கிடைத்தால் என்னுடைய மனம் கொஞ்சம் அமைதியாக இருக்கும்.

என்னுடைய மனதில் இருந்து அனைத்து குறைகளையும் போட்டு உடைத்து விட்டேன் என்ற ஒரு தெம்பு எனக்கு தற்போது இருக்கிறது.. என்று தன்னுடைய காதல் பிரேக் அப் ஆனது குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES