நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 1980களில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. ’ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதலில் இலக்கிய அவர் அதன் பிறகு ரஜினியின் ’ஊர்க்காவலன்’ உள்பட பல படங்களை இயற்றினார்.

அதுமட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களில் அவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் கூட அவர் சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. மனோபாலாவின் மறைவு செய்தி கேட்டதும் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

LATEST News

Trending News

HOT GALLERIES