உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம்: குஷ்புவின் இரங்கல் பதிவு..!
நடிகை குஷ்பு வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் குட்டி இறந்து விட்டதை அடுத்து உன் இறப்பால் நாங்கள் மனம் உடைந்து போய் உள்ளோம் என்று தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு என்பதும் அவர் தயாரிப்பாளராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் தனது திரையுலக மற்றும் அரசியல் தகவல்களை பகிர்ந்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் 12 ஆண்டுகள் வளர்ந்த செல்ல நாய்க்குட்டி இறந்து விட்டதை மிகவும் சோகத்துடன் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராக நீ இருந்தாய், ஒரு கூச்ச சுபாவம் உள்ள நாய்க்குட்டியாக எங்களிடம் வந்த நீ, அதன்பிறகு எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தாய். உனது புரிதல், நீ காட்டும் அன்பு, உன் புன்னகை, கோபம் ஆகியவை எங்கள் மனதை கவர்ந்தன. உன் இறப்பால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போய் உள்ளோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம், உன்னை போல் இனி யாராலும் இருக்க முடியாது, கடவுளே தயவு செய்து எங்கள் நாய்க்குட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.