வெளிநாடுகளில் இருப்பது கூட தமிழகத்தில் இல்லையா?- கடும் சோகத்தில் பொன்னியின் செல்வன் 2 பட ரசிகர்கள்...
கடந்த வருடம் தமிழ் சினிமா பெருமையடையும் வகையில் வெளியான ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கியுள்ளார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி என நிறைய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி குறித்து நமக்கே தெரியும் இப்போது இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
பட ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு பல இடங்களில் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திற்கு சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்கள்.
தற்போது என்னவென்றால் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் காட்சி கேரளா மற்றும் ஓவர்சீஸில் அதிகாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
ஆனால் தமிழகத்தில் முதல் காட்சியே 9 மணிக்கு தான் ஆரம்பமாகிறதாம். இதனால் அங்கெல்லாம் அதிகாலை வருகிறதே தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.