பிரியா பவானிசங்கரின் நீச்சல்குள புகைப்படம்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

பிரியா பவானிசங்கரின் நீச்சல்குள புகைப்படம்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை பிரியா பவானி சங்கர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.


தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதனை அடுத்து அவர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ அருண் விஜய்யின் ’மாபியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ஜெயம்ரவியின் ‘அகிலன்’, சிம்புவின் ’பத்து தல’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஆகிய படங்களின் நாயகி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’டிமான்டி காலனி 2’ ’பொம்மை’ ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவலைத்திலும் அவர் பிரபலமாக உள்ளார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES