5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: இன்னொரு ஹீரோவும் இணைகிறார்.

5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: இன்னொரு ஹீரோவும் இணைகிறார்.

ஐந்து மொழிகளில் தயாராக உள்ள விஜய்சேதுபதியின் படத்தில் இன்னொரு ஹீரோவும் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் பான் - இந்தியா திரைப்படங்களாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தமிழ் மொழியில் மட்டுமே மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் உருவாகி வந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

 

அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படமும் பான் - இந்தியா படமாக உருவாகவுள்ளது. விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’புரியாத புதிர்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல் உள்ளது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இன்னொரு ஹீரோவாக சந்தீப்கிஷான் இணைய இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES