திருநெல்வேலியில் களமிறங்கிய அஜித்தின் குழு... குவியும் பாராட்டுகள்

திருநெல்வேலியில் களமிறங்கிய அஜித்தின் குழு... குவியும் பாராட்டுகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் தக்‌ஷா குழு திருநெல்வேலியில் களமிறங்கி உள்ளது.

நடிகர் அஜித் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழுவினர் உருவாகியுள்ள டிரோன் கேமராக்கள் கொரோனா தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தக்‌ஷா குழுவும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

அஜித்

 

அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள், கொரோனா பரவும் பகுதிகளில் கிருமிநாசினியை தெளித்து வருகின்றன. இந்தக் குழு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். எனவே அரசுக்கு உதவி வரும் தக்‌ஷா குழுவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES