கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் ஜீவா - சொந்தாஷமான பதிவு
உலகளவில் இந்த கொரோனா பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது. அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனவால் மரணமடைந்து வருகின்றனர்.
இதனால் கொரோனா தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது.
45 வயதிற்கு மேற்பட்ட அனைவர்களுக்கும் இந்த தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
18 வயதை கடந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா கொரோனா தட்டுப்பூசி போட்டுக்கொண்டார்.
மேலும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும், வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.