மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருள் ஆகி வருகிறது. இவர்கள் விவகாரம் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்! | Joy Crizildaa Revel Madhampatty Rangaraj Babyகடந்த ஆண்டில் இருந்தே  இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டிரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்! | Joy Crizildaa Revel Madhampatty Rangaraj Baby

முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்துவருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்! | Joy Crizildaa Revel Madhampatty Rangaraj Baby

இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து,மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை: குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய ஜாய்! | Joy Crizildaa Revel Madhampatty Rangaraj Babyமரபணு பரிசோதனைக்குப் பின், அறிக்கையைப் பெற்று, அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும்படி வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 30 ஆம்  திகதிக்கு  தள்ளிவைத்தார்.

இந்நிலையில், முதல் முறையாக தனது மகனின் முகத்தை காட்டி Xerox copy of his father என பதிவிட்டு தற்போது  ஜாய் ஜாய் கிரிஸில்டா  வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

LATEST News

Trending News