கர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

கர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 

 

இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுவந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

ரஜிஷா விஜயனின் இன்ஸ்டகிராம் பதிவு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜிஷா தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறி உள்ளார். படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES