2வது கணவர் மீது புகார் அளித்த பிரபல நடிகை - ஆனால் தீடீரென வாபஸ் வாங்கியது ஏன்?
பிரபல நடிகர் முரளி நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா.
முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் இருந்து வரும் நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் நடிகை ராதா நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ராதா, இன்று அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால், அந்த புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை ராதா தெரிவித்துள்ளார்.