நடிகை ப்ரியாமணியிடம் தவறான புகைப்படத்தை கேட்ட ரசிகர் - சரியான பதிலடி கொடுத்த நடிகை
கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி.
இப்படத்திற்காக 2006ஆம் ஆண்டு சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார் நடிகை ப்ரியாமணி.
தமிழ், தெலுங்கு, என பல்வேறு மொழிகளில் நடித்த வந்த நடிகை ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகு சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரைடிய நடிகை ப்ரியாமணியிடம் தவறான முறையில் புகைப்படத்தை கேட்டுள்ளார் ரசிகர்.
இதற்கு நடிகை ப்ரியாமணி 'முதலில் உன் அம்மா, அக்காவை இதை செய்ய சொல் " என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இதன்பின் அந்த ரசிகர், நடிகை ப்ரியாமணியிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்துள்ளார்.