விருது வென்றது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட அறிக்கை, என்ன கூறியுள்ளார் பாருங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கு உலகமெங்கிலும் அதிகபடியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கபட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று காலை இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
இதனால் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் அனைவர்க்கும் நன்றி தெரிவித்து அவரின் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்ப்பித்துள்ளார்.