பாண்டியனிடம் மன்னிப்பு கேட்ட நிலா.. காரணம் என்ன? அய்யனார் துணை சீரியல் புரோமோ
அய்யனார் துணை
வானதி தனக்கு இனிமேல் பாண்டியன் வேண்டாம் என்றும் வேறொரு மாப்பிள்ளை பார்க்கும்படியும், தான் அவரை திருமணம் செய்துகொள்கிறேன் எனவும் கூறினார். இதனால் பாண்டியன் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

இந்த நேரத்தில், சோழனும் நிலாவும் வானதியை அழைத்து நாங்கள் பேசுகிறோம் என கூறுகிறார்கள். ஆனால், பாண்டியன் அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார். அதை மீறியும் வானதியை அழைத்து சோழனும் நிலாவும் பேசுகிறார்கள்.
மன்னிப்பு கேட்ட நிலா
அப்போது வானதியிடம், 'நீ என்னமா வேறொரு பையனை திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறாய்' என சோழன் கேட்க, 'என் மேல் உங்களுக்கு என்ன அப்படி அக்கறை, இவ்வளவு பேசுகிற நீங்கள் இருவரும் எப்போது கல்யாணம் பண்ணீங்க' என கேட்க சோழன் கடுப்பாகிவிடுகிறார். வானதி கிளம்பி போ என கூறிவிடுகிறார்.
சோழனும் நிலாவும் வானதியை சந்தித்த விஷயத்தை அறிந்த பாண்டியனுக்கும் சோழனுக்கும் கடும் சண்டை வருகிறது. இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்ள நிலா வந்து இந்த சண்டையை நிறுத்துகிறார். இதன்பின், 'சோழன் மீது எந்த தப்பும் இல்லை, நான்தான் வானதியிடம் பேசலாம் என சொன்னேன், என்னை மன்னித்து விடுங்கள்' என பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.