வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சிப் புயலாக மாறிய யாஷிகா ஆனந்த்.. சோசியல் மீடியாவை உலுக்கிய போட்டோஸ்!
சென்னை: தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயலாகவும், சோசியல் மீடியாவின் ஹாட் அலையாகவும் வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. எப்போதுமே தனது தனித்துவமான ஃபோட்டோஷூட்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் யாஷிகா, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஒரு கிளாமர் அவதாரத்தில் களம் இறங்கியுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்: இந்தத் பிரத்யேகப் போட்டோஷூட்டில், முத்துக்கள் பதிக்கப்பட்ட கவர்ச்சியான வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் அதற்குப் பொருத்தமான மினி ஸ்கர்ட் அணிந்து தேவதை போல் காட்சியளிக்கிறார். இடுப்பில் மெல்லிய டிசைனர் ஒட்டியாணம் அணிந்து, கைகளை இடுப்பில் வைத்தபடி அவர் கொடுத்துள்ள இந்த 'கில்லர் போஸ்' ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது. இவற்றுடன் அவரது கண்புருவங்களுக்கு மேல் ஒட்டப்பட்டுள்ள ஸ்டோன் டிசைன் மேக்கப் மற்றும் ட்ரெண்டியான ஹேர்ஸ்டைல் அவரது ஒட்டுமொத்த அழகையும் அதிகரித்துள்ளது.

கவர்ச்சி போட்டோஸ்: மற்றொரு புகைப்படத்தில் சுவரை ஒட்டி நின்று, தனது அழகான பின்னழகைக் காட்டியபடி அவர் கொடுத்துள்ள ஸ்டைலிஷ் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி பின் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு இருந்த யாஷிகா, இடையில் விபத்தில் சிக்கினார். இதனால், இரண்டு மாதம் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, அதையெல்லாம் கடந்து தற்போது மீண்டும் முழு ஃபார்முக்கு வந்தார். தற்போது அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை என்றாலும், தினமும் உடற்பயிற்சி மூலம் தனது உடலமைப்பைக் கச்சிதமாகப் பராமரித்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வெள்ளை நிற ஆடைக் கேலரி, அவரது ரசிகர்களுக்கு ஒரு செம்ம கிளாமர் விருந்து வைத்துள்ளார்.