அதற்கு எல்லைகள் என்பதே இல்லை.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, பின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மாறன், தங்கலான் என படங்களில் நடித்து வந்தார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் சர்தார் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக நட்சத்திரங்கள் அவ்வப்போது பேட்டிகளில் பேசும் விஷயங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
இதில், "இன்றைய சினிமாவுக்கு எல்லைகள் என்பதே கிடையாது. திறமை இருந்தால் போதும், எந்த மொழி சினிமாவிலும், எந்த மொழியை சேர்ந்த கலைஞர்களும் புகழ் வெளிச்சம் பெறலாம். திறமை இருந்தால் பெருமை தேடி வரும். சினிமாவில் வெற்றியும், தோல்வியும் சகஜம்தான்" என கூறியுள்ளார்.
