மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
90ஸ் கிட்ஸின் மனதில் இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகிய ரம்பா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், 16வருடங்களுக்கு பின் நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கதைகளை கேட்டு அதில் ஓரிரு கதைகளை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ரம்பா மீண்டும் நடிக்க வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.