சின்னத்திரை நடிகையின் மரணத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..
கன்னடத்தில் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மி லீலா.
37 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ராஷ்மி, 2019ஆம் ஆண்டு முதல் 'பல்மோனரி ஃபைப்ரோஸிஸ்' எனப்படும் தீவிர நுரையீரல் தழும்பேறுதல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நிலை ஒத்துழைக்காததால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
