பணத்திற்காக தான் மறுமணம் செய்தேனா.. பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் எல்லாம் இவர் தொகுத்து வழங்கிய முக்கிய நிகழ்ச்சிகள். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
பிஸியாக வேலை செய்துகொண்டிருந்தவர் இந்த வருட ஆரம்பத்தில் வசி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அவர் பெரிய பணக்காரர், தீவு எல்லாம் வைத்துள்ளார், ரூ. 200 கோடிக்கு சொந்தக்காரர் என சில யூடியூப்களில் கூறப்பட்டது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை, அவர் இலங்கையை சேர்ந்தவர், குடும்பம் லண்டனில் உள்ளார்கள்.
அங்கு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார், அவ்வளவு தான். இத்தனை வருடம் நான் வேலை செய்துள்ளேன், என்னிடம் பணம் இருக்காதா என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.