கன்றாவி.. நடிகர் நடிகைகள் விவாகரத்துக்கு காரணம் இது தான்.. அதிர வைத்த பாடகி சுசித்ரா!
பிரபல பாடகி சுசித்ரா, தமிழ் திரையுலகில் திரைமறைவு நிகழ்வுகள் குறித்து வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் தொடர்ந்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுசித்ராவின் கருத்துகள், திரையுலக பிரபலங்களின் திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சுசித்ராவின் கூற்றுப்படி, “பிரபலங்களின் விவாகரத்துக்கு ‘கருத்து வேறுபாடு’ என்பது மட்டுமே காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் வேறு.” திரைத்துறையைச் சேராத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நடிகர்கள் திருமணம் செய்யும்போது, அந்தப் பெண்கள் திரையுலகின் பிரகாசமான சூழலையும், சக நடிகைகளின் புகழ் மற்றும் செல்வத்தையும் கண்டு பதற்றமடைகின்றனர்.
இந்தப் பதற்றம், சில நடிகர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களின் தனிப்பட்ட வாழ்கையை நாசம் ஆக்குகிறது என சுசித்ரா குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்துக்கு இதுவே காரணம் என அவர் தெரிவித்தார். “ஜெயம் ரவி, ஆர்த்தியை நண்பர்கள் என நம்பி பார்ட்டிகளுக்கும், வெளிநாட்டு பயணங்களுக்கும் அழைத்துச் சென்றார்.
ஆனால், இந்த சூழல் பிரச்சனைகளை உருவாக்கி, இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுத்தது,” என்று சுசித்ரா கூறினார். மேலும், சில நடிகர்கள் தங்கள் மனைவிகளை திரையுலக நிகழ்ச்சிகளில் இருந்து தவிர்ப்பதாகவும், குடும்ப நிகழ்வுகளில் மட்டுமே அவர்களை அனுமதிப்பதாகவும் சுசித்ரா சுட்டிக்காட்டினார்.
“இவர்கள் திரையுலகில் உள்ள ‘விஷமிகளின்’ தன்மையை நன்கு அறிவார்கள். ஆனால், ஜெயம் ரவி போன்றவர்கள், நண்பர்கள் என்று நம்பி மனைவியை அழைத்துச் செல்வதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, விவாகரத்துக்கு வந்து நிற்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். சில நடிகர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்த சுசித்ரா, “அவர்களின் திரை வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் வேறு,” என்று தெரிவித்தார்.
உதாரணமா, நடிகர் கார்த்தியை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்தில் திருமணம் செய்தார். அவருடைய மனைவியை ஏதாவது ஒரு சினிமா நிகழ்ச்சி, பார்ட்டி என பார்த்திருக்கிறீர்களா..? ஏனென்றால் கார்த்திக்கு இங்கே இருக்க கூடிய விஷமிகள்பற்றி நன்றாகவே தெரியும். கார்த்தி மட்டுமல்ல, குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் எந்த நடிகரும் இதைத்தான் செய்வார்கள் என வாதிடுகிறார்.
இந்த கருத்துகள், தமிழ் சினிமாவில் நடிகர்களின் திருமண உறவுகளில் உள்ள சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து குறித்து முன்பு பரவிய வதந்திகளை மறுத்து, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சர்ச்சை, திரையுலகில் உறவுகள் மற்றும் ஒற்றுமை குறித்த புதிய விவாதங்களை தூண்டியுள்ளது