பழக்கம் இல்லன்னு சொல்லியும் என்னை பாடாய் படுத்துனாங்க.. முன்னணி நடிகர்கள் குறித்து மீனா!
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தன்னுடைய இயல்பான பேச்சு மற்றும் அன்பான புன்னகையால் ரசிகர்களை கவர்ந்தவர்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.
அவர்களை "சார்" என்று அழைத்து ஏற்பட்ட நகைச்சுவையான தருணங்களை நினைவு கூர்ந்து சிரித்தபடி பேசியது ரசிகர்களிடையே புன்னகையை வரவழைத்துள்ளது.
மலையாள திரையுலகில் அறிமுகமானபோது, மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரை மரியாதையாக "சார்" என்று அழைத்து வந்தார் மீனா. ஆனால், அவர்கள் இருவரும், "எங்களை சார் என்று அழைக்க வேண்டாம், மம்மூக்கா, லாலேட்டா என்று அழைத்தால் போதும்" என்று அன்போடு கூறினர்.
இருப்பினும், மீனாவுக்கு இது பழக்கமில்லாத ஒன்றாக இருந்தது. "நான் எப்போதும் அனைவரையும் சார் என்று தான் அழைப்பேன்" என்று பலமுறை விளக்கிய போதிலும், பழக்க தோஷத்தில் சில நேரங்களில் "சார்" என்றே அழைத்து விடுவார்.
ஒவ்வொரு முறையும் மம்முட்டியும் மோகன்லாலும், "சார் வேண்டாம், மம்மூக்கா, லாலேட்டா என்று அழையுங்கள்" என நினைவூட்டி, மீனாவை சற்று கிண்டலாக பாடாயப்படுத்தியதாக அவர் புன்னகையுடன் பகிர்ந்தார்.
இந்த சம்பவம் மீனாவின் பணிவையும், மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் அன்பு பொழியும் இயல்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. மலையாள சினிமாவில் "மம்மூக்கா" மற்றும் "லாலேட்டா" என்று அழைப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, அன்பு பொருந்திய அழைப்பு முறையாகும்.
மீனாவின் இந்த பேட்டி, அவர்களுக்கிடையேயான அழகிய புரிதலையும், சினிமா துறையில் மூத்த நடிகர்களுக்கும் இளம் நடிகைகளுக்கும் இடையே உள்ள மரியாதையையும் புன்னகையுடன் வெளிப்படுத்தியுள்ளது.