முதலமைச்சரின் மகனாக இருந்தால் என்ன.. எனக்கு இந்த கொடுமை நடந்தது.. சீரியல் நடிகை சுஜிதா ஆவேசம்..!

முதலமைச்சரின் மகனாக இருந்தால் என்ன.. எனக்கு இந்த கொடுமை நடந்தது.. சீரியல் நடிகை சுஜிதா ஆவேசம்..!

பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா, பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து சமீபத்திய சம்பவங்களின் அடிப்படையில் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். 

கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றும், பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

சுஜிதாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சின்னத்திரையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகை சுஜிதா, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுஜிதா, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். 

சுஜிதா தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைத்து கூறியது என்ன என்றால்.. "கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஒரு பெண் கற்பை இழந்துவிட்டால் அவளை குறை சொல்லும் இந்த சமூகம், ஒரு ஆண் தன்னுடைய கற்பை இழந்தாலும் குறை சொல்ல வேண்டும். 

ஒரு பெண்ணுக்கு ஒருவன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால், அதனை தைரியமாக வெளியே வந்து சொல்ல வேண்டும், அதுதான் அழகு. அப்போதுதான் நீ பெண் என்ற தைரியத்தை பெண்களுக்கு நான் கொடுக்க வேண்டும். என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொள்கிறான் என்றால், அவன் முதலமைச்சரின் மகனாக இருந்தாலும், பிரதமரின் மகனாக இருந்தாலும் வெளியே வந்து சொல்ல வேண்டும்.

இவன் என்னை இப்படி செய்தான்.. எனக்கு இந்த கொடுமை நடந்தது.. என்று தைரியமாக சொல்ல வேண்டும்." சுஜிதா மேலும் கூறுகையில், பெண்கள் தங்களுக்கு நேரும் அநீதிகளை மூடி மறைக்காமல், தைரியமாக வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். 

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களை சுட்டிக்காட்ட பெண்கள் தயங்கக் கூடாது என்றும் அவர் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார். 

நடிகை சுஜிதாவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் சுஜிதாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

பெண்கள் தங்களது பிரச்சனைகளை தைரியமாக பேச வேண்டும் என்ற சுஜிதாவின் கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

சுஜிதா, பிரபலமான நடிகையாக மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சுஜிதாவின் இந்த தைரியமான பேச்சு பல பெண்களுக்கும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LATEST News

Trending News