ஏமாற்றிவிட்டனர்.. வனிதா விஜயகுமார் போலீசில் அதிரடி புகார்

ஏமாற்றிவிட்டனர்.. வனிதா விஜயகுமார் போலீசில் அதிரடி புகார்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

நடிகை வனிதா என்றால் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இவர் Mrs & Mr என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார்.

அந்த படத்தில் ராபர்ட் மற்றும் வனிதா ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இப்படத்தில் இவர்கள் திருமணம் செய்வது போன்ற காட்சி இடம் பெற்று வைரல் ஆகி இருந்தது.

ஏமாற்றிவிட்டனர்.. வனிதா விஜயகுமார் போலீசில் அதிரடி புகார் | Vanitha Files A Case

இந்நிலையில் வனிதா மீது தன்ராஜ் என்ற நபர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். சாட்டிலைட் உரிமைக்காக 40 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் அளித்திருக்கிறார்.

ஆனால் அந்த நபர் யாரென்றே எனக்கு தெரியாது எனவும் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது எனவும் வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.  

ஏமாற்றிவிட்டனர்.. வனிதா விஜயகுமார் போலீசில் அதிரடி புகார் | Vanitha Files A Case

LATEST News

Trending News