பேச்சுலர் ரூமில்.. மேலாடை அணியாமல்.. சிறுநீர்ப்பாதையில் கடுமையான வலி.. அகப்பட்ட சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!
சன் டிவியில் ஒளிபரப்பான "பூவே உனக்காக" சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் நடித்தபோது தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ப்ரீத்தி மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, வெளிப்புற படப்பிடிப்புகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
சினிமா மற்றும் சீரியல் துறைகளில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல், சாதாரண வாழ்க்கையிலும் பெண்கள் பல இடங்களில் இந்த சவால்களை எதிர்கொள்கின்றனர்.
சில பிரபலங்கள் தைரியமாக இது குறித்து வெளிப்படையாக பேசினாலும், பலர் பயத்தின் காரணமாக அமைதியாக கடந்து சென்று விடுகின்றனர்.அந்த வகையில், நடிகை ராதிகா ப்ரீத்தி "பூவே உனக்காக" சீரியலில் நடித்தபோது பல்வேறு சிரமங்களை அனுபவித்ததாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேட்டியில் பகிர்ந்த முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
"பூவே உனக்காக" சீரியல் செட் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை என ராதிகா ப்ரீத்தி கூறுகிறார். குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி பாத்ரூம் வசதி அங்கு கிடையாது.
மேலும், செட்டிலேயே ஒரு குடும்பம் வசித்ததாகவும், அவர்களும் அதே பாத்ரூமை பயன்படுத்தியதால், சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இந்த பாத்ரூமை பயன்படுத்தியதால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டு சிறுநீர்ப்பாதையில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும் நடிகைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என ராதிகா ப்ரீத்தி குற்றம் சாட்டுகிறார். ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக சென்றபோது, பேச்சுலர் ரூமில் ரெடியாக சொல்லியிருந்ததாகவும், அங்கு வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால், அறைக்குள் சென்றபோது மேல் சட்டை அணியாமல் ட்ரவுசர் மட்டும் அணிந்திருந்த ஒருவர் உள்ளே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக ராதிகா ப்ரீத்தி கூறினார்.
சீரியல் குழுவினரிடம் இது குறித்து பேசியபோது, "பெரிய ஆர்டிஸ்ட்களே இதையெல்லாம் கண்டுக்காம ரெடி ஆவாங்க, நீ இப்பதானே வந்திருக்க இதெல்லாம் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா? இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினால் தான் முடியும்" என்று அலட்சியமாக பதிலளித்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அவுட்டோர் ஷூட்டிங் ஸ்பாட்களில் டாய்லெட் வசதி கூட செய்து தரப்படாத அவல நிலையை ராதிகா ப்ரீத்தி சுட்டிக்காட்டுகிறார். இயற்கை உபாதைகளை கழிக்க பக்கத்து வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கேட்க வேண்டிய அவல நிலை தங்களுக்கு ஏற்பட்டதாகவும், சில வீடுகளில் திட்டியும் அனுப்பியதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.
இறுதியாக வேதனையுடன் கேள்வி எழுப்பிய ராதிகா ப்ரீத்தி, "எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவுதான் அட்ஜஸ்ட் பண்றது?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சினிமா மற்றும் சீரியல் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராதது எந்த விதத்தில் நியாயம் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராதிகா ப்ரீத்தியின் இந்த வெளிப்படையான பேட்டி, திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.