உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் சுற்றி.. இனிமே.. யார் கூப்பிட்டாலும் இது தான் பதில்.. சாய் தன்ஷிகா ஓப்பன் டாக்..!

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் சுற்றி.. இனிமே.. யார் கூப்பிட்டாலும் இது தான் பதில்.. சாய் தன்ஷிகா ஓப்பன் டாக்..!

நடிகை சாய் தன்ஷிகா, 'பேராண்மை' திரைப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கல்லூரி வளாகத்தை சுற்றி வந்த காட்சியில் நடித்து அதிர்வுகளை கிளப்பியவர். 

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பேராண்மை' படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அதில், அந்த படத்தின் படப்பிடிப்பின் கடினங்கள் மற்றும் அத்தகைய படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. 

சாயி தன்ஷிகா அந்த பேட்டியில் கூறியதாவது, "பேராண்மை போன்ற ஒரு படத்தில் நடிப்பது அவ்வளவு எளிமையான விஷயம் கிடையாது. ஏனென்றால் அந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்தது. 

ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் ஐந்து மலைகள் வரை செல்ல வேண்டும். கரடு முரடான பாதைகளில் பயணிக்க வேண்டும். அவ்வளவு சிரமமான பயணம் அது. அதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 

ஒவ்வொரு காட்சிகளும் தத்ரூபமாக வந்ததற்கும் காரணம், அதற்குண்டான லொகேஷன் மற்றும் காட்சிகளை படமாக்கியதும்தான். அதுதான் அந்த படத்திற்கு சிறப்பு சேர்த்தது. ஆனால் அதற்கு பின்னால் இருந்த எங்களுடைய கஷ்டத்தை கூட இருந்து பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். 

ஒரு 30 நாள் படப்பிடிப்பு இருக்கிறது என்றால் அந்த 30 நாளுமே கடினமான பாதைகளை கடந்து செல்ல வேண்டிய கட்டாயமாகிவிடும். முப்பது நாளுமே மிகவும் கஷ்டமானதாகவே இருக்கும். அந்த அளவுக்கு படப்பிடிப்பு லொகேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று 'பேராண்மை' படப்பிடிப்பின் சவால்களை விவரித்தார். 

மேலும், "அது போன்ற ஒரு படத்தில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நான் போக மாட்டேன்" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதாவது, உடல் ரீதியாக மிகவும் சவாலான மற்றும் கடினமான லொகேஷன்களில் படப்பிடிப்பு கொண்ட படங்களில் மீண்டும் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

சாயி தன்ஷிகாவின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 'திறைப்படம்' படத்தில் அவர் துணிச்சலான காட்சியில் நடித்தது ஒருபுறம் இருக்க, 'பேராண்மை' படப்பிடிப்பின் கஷ்டங்கள் குறித்து அவர் பேசியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

LATEST News

Trending News