பின்னழகில் குத்து வாங்குறதுக்கு இத்தனை கோடியா..? கிறுகிறுன்னு வருதுப்பா சாமி..!
டக்கு மஹாராஜா திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் கதாபாத்திரம் மற்றும் அவர் பெற்ற சம்பளம் குறித்து பல விமர்சனங்களும், ஆச்சரியங்களும் எழுந்துள்ளன.
லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி நடித்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரவுத்தேலா, டக்கு மஹாராஜாவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால், இந்த படத்தில் அவர் நடித்ததற்காகவும், குறிப்பாக ஒரு பாடலுக்கு அவர் ஆடிய நடனத்திற்காகவும் அவர் பெற்ற சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஊர்வசி ரவுத்தேலா டக்கு மஹாராஜா படத்தில் நடிப்பதற்காக மட்டும் 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், “டபிடி டிபிடி” என்ற பாடலில் அவர் ஆடிய நடனத்திற்காக தனியாக 2.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்த படத்திற்காக மட்டும் அவர் 9.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“டபிடி டிபிடி” பாடல் வெளியானதிலிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பாடலில் பாலையாவுடன் ஊர்வசி ஆடிய நடன அசைவுகள், குறிப்பாக பாலையாவின் கையால் தனது பின்னழகில் குத்துவது போன்ற காட்சிகள், ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்த மாதிரியான நடன அசைவுகள் திரைப்படத்தில் இருக்கக் கூடாது என்றும், இது தரமற்ற நடனம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் இந்த பாடலின் நடன அசைவுகள் விமர்சிக்கப்பட்டாலும், ஊர்வசி இந்த பாடலுக்கு மட்டும் 2.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
இப்படி ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதா என்று பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள், “இப்படி ஆடுவதற்கு இரண்டரை கோடியா?” என்று கேலி செய்தும் வருகின்றனர்.
டக்கு மஹாராஜா திரைப்படம் ஊர்வசி ரவுத்தேலாவின் சம்பளம் மற்றும் நடன அசைவுகள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவரது சம்பளம் திரையுலகில் ஒரு புதிய பேச்சு பொருளாக மாறியுள்ளது.
