“உடலுறவில் இது வேணும்ல..” ஓவியா சர்ச்சை பேச்சு..! கூச்சமில்லாமல் இபப்டி சொல்லிட்டாரே..!
நடிகை ஓவியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலியல் கல்வி குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும்.
அது இன்றைய கால சூழலின் தேவையாக இருக்கிறது. அதனை பள்ளி அளவிலேயே மாணவர்கள் மத்தியில் புரிய வைத்து விட்டால் பாலியல் குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கலாம் என்பது இப்படி பாலியல் கல்வியை கட்டாயாமாக்க கோரும் நபர்களின் கருத்தாக இருக்கிறது.
அதே நேரம் இந்த பாலியல் கல்வியே அவர்களுக்கு இதன் மீதான எதிர்பார்ப்பை, ஆசையை தூண்டும் விதமான.. அவர்களுடையை படிப்பின் மீதான ஆர்வத்தை திசை திருப்பும் விதமாகவும் அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது.

இதனை மாணவர்களுக்கு பாடமா நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயங்குவார்கள். இன்னும் சில ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை இதை கொண்டு தவறாகவும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக்க அமைந்துவிடும்.
ஏனென்றால், சமீப காலமாக ஆசிரியர்களால் மாணவிகள் சீண்டலுக்கு உள்ளாவது பற்றிய செய்திகளை பார்க்கிறோம். இது விவாதத்துக்கு உள்ளாக வேண்டிய விஷயமே கிடையாது.
இதெல்லாம் அவர் அவர்களாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பள்ளிகளில் பாலியல் கல்வியை கொண்டு வருவது, எலிக்கு பயந்து வீட்டை எரித்த கதையாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது என இதனை எதிர்ப்பவர்கள் கூறக்கூடிய கருத்தாக இருக்கிறது.