ஜானி மாஸ்டர் விஷயத்தை என்னிடம் எதுவும் கேட்காதீங்க.. கோவமாக பதிலளித்த தேசிய விருது நடிகை
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா என பலருக்கு படங்களில் நடனம் அமைத்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர்.
தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார். சமீபத்தில், இவர் 21 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெங்களூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் படத்தில் 'பறக்க பறக்க' என்ற பாடலின் நடனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நித்யா மேனன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ஜானி மாஸ்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு " இது குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். ஆனால், அந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைக்கப்பட்டிருந்தது. தேசிய விருதுக்கு தகுதியான பாடல்தான் அது” என்று கூறியுள்ளார்.