எங்க அம்மாவ அப்படி இருக்க சொன்னாங்க.. எமோஷ்னலாக பேசிய பிக்பாஸ் ஜாக்குலின்..
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் வாய்ப்பில்லாமல் யூடியூப் சேனல் நடத்தி பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார் விஜே ஜாக்குலின்.
தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். துவங்கிய இரு நாட்களிலேயே ஜாக்குலின் சக போட்டியாளர்களால் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு ஒரு மனநிலைக்கு வந்ந்துள்ளார்.
இந்நிலையில் ஜாக்குலின் சமீபத்தில் தன் அம்மா குறித்து எமோஷ்னலாக பேசியது அனைவரது கவனத்தை கவர்ந்து வருகிறது.
ஆம்பள இல்லாததால் தான் நான் இப்படி இருக்கேன்னு எங்க அம்மாவ சொன்னாங்க. எங்க அம்மாவ பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாதுன்னு என்னென்னமோ சொன்னாங்க.
இதையெல்லாம் எதிர்த்து நான் மட்டும்தான் பேசிட்டு இருந்தேன், என்ன மாதிரி நிறைய பேர் பேசணும் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் ஜாக்குலினி.