மகாநடிகை நிகழ்ச்சியில் இலங்கை பெண் போட்டியாளர் கவிப்பிரியா... கண்கலங்கிய நடுவர்கள்..
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதோடு சில நிகழ்ச்சிகள் சில சமூக கருத்துக்களை கூறி மிகப்பெரிய கவனத்தை பெறும். அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மகாநடிகை என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது.
இதற்கான ஆடிஷன் நடத்தப்பட்டு கிராண்ட் லான்ச் நிகழ்ச்சி வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. விஜய் ஆண்டனி, சரிதா, அபிராமி, இயக்குநர் லிங்கு சாமி உள்ளிட்ட பலர் நடுவர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த கவிப்பிரியா என்ற பெண் கலந்து கொண்டுள்ளார். மகாநடிகை நிகழ்ச்சிக்கான கிராண்ட் லான்சில் கவிப்பிரியா, பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை பற்றி நடித்து காட்டியிருக்கிறார்.
எமோஷ்னலாக நடித்துக்காட்டியதால் அரங்கில் இருந்த அனைவரும் கண்கலங்கினார்கள். மேலும் நடிகை சரிதா, அபிராமி மேடைக்கு வந்து உருக்கமாக பேசியிருக்கிறார்கள். தற்போது மகாநடிகை நிகழ்ச்சியின் பிரமோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.