மீண்டும் இணையப்போகும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி .. சுவாரசியமான தகவலை பகிர்ந்த பிரபல பத்திரிகையாளர்
தமிழ் சினிமாவில் மிகவும் அழகான ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் தற்போது வலம் வரும் தனுஷ், ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென இவர்கள் பிரிய போவதாக அறிவித்தனர்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை எழுப்பினாலும். மறுபக்கம், இவர்கள் பிரிவு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விரைவில் இணையப் போகிறார்கள் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், "ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து அடுத்த வருடத்துடன் 50 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதனையொட்டி ஐஸ்வர்யா ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ள உள்ளார்" என கூறியுள்ளார்.
இந்த தகவல் உண்மையாக வேண்டும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.