சிவகார்த்திகேயனின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்!! கீர்த்தி சுரேஷின் ஆசை..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.
தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள ஸ்டைலில் துபாயின் ஓணம் கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
சமீபத்தில் துபாய்யில் நடந்த SIIMA விருதுவிழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மொழிக்கான தசரா படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கனும், ஒரு நாள் அவர் தன்னுடைய 3 குழந்தைகளை எப்படி சமாளிக்கிறார், எந்தளவிற்கு கலகலவென இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.