பூமராங் போல் திருப்பி தாக்கும்!! ஆர்த்தி விஷயத்தில் ஜெயம் ரவியை எச்சரித்த நடிகை குஷ்பூ..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து யாரும் தவறாக பேசவேண்டும் வாழு வாழ விடு என்று பிரதர் பட நிகழ்ச்சியில் முடிந்து கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜெயம் ரவி - ஆர்த்தியின் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட நடிகை குஷ்பு இத்தனை நாட்களாக எதுவும் கூறாமல் இருந்தார். தற்போது அவரின் எக்ஸ் தளப்பக்கத்தில், ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயர்ந்து நிற்கிறான். அவன் தன் தேவை, ஆசை, விருப்பம், சுதந்திரங்கள் அனைத்தையும் குடும்பத்தின் முன் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், தவறுகள் நடக்கும், அதற்காக அத்தனை ஆண்டுகல் கட்டி பாதுகாத்து வந்த வாழ்க்கையை கைவிடுவது ஒருபோதும் சரியாகாது. உறவில் சில நேரங்களில் காதல் குறைந்து போகலாம். ஆனால் வாழ்க்கை அழகானது என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.
சுயநலத்தோடு நாம் எடுக்கும் முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நம்மையே கடுமையாக தாக்கும் என்று மறந்துவிடக்கூடாது. குழந்தையின் தாயை மதிக்க வேண்டும் என்பது அடிப்படை மரியாதை, இது இல்லாமல் ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறவோ முடியாது.
A true man stands tall, putting his family above all else. His needs, whims, desires, and freedoms all come second to the ones who love him unconditionally. In the journey of life, every marriage faces its ups and downs, and yes, mistakes happen. But these missteps never grant a…
— KhushbuSundar (@khushsundar) September 21, 2024
ஒரு தாயை உன்னை நேசிக்கும் பெண்ணை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது, அன்பு அசையக்கூடும், ஆனால் மரியாதை என்பது இதயங்களையும் ஆன்மாக்களையும் ஒன்றாக இணைக்கும்.
குடும்பத்தை போற்றுவதும்தான் உண்மையான பலம் என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார். இதனை ஜெயம் ரவியை மறைமுகமாக தாக்கி ஆர்த்திக்கு சப்போர்ட் செய்வது போல் குஷ்பு கருத்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.