அவரால் நானும் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்!! அதிர்ச்சி கொடுத்த மனைவி ஆர்த்தி...
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், 15 வருடமாக ஆர்த்தியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜெயம் ரவி. சில தினங்களுக்கு தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் ஜெயம் ரவி.
இந்நிலையில் விவாகரத்து குறித்து அதிர்ச்சி தரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி. சமூகவலைத்தளங்கள் வெளியாகி வரும் அறிக்கையை பார்த்து நான் கவலையும் மனவேதனையும் அடைந்தேன்.
இது முழுக்க முழுக்க என் ஒப்புதல் இல்லாமல் வெளியான ஒன்று. என் கணவரிடம் மனம்விட்டு பேச, சந்திக்க வேண்டும் என பலவித முயற்சிகள் செய்ததாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும் திருமண பந்தத்தில் இருந்துவிலக வேண்டும் என்ற முடிவை முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று ஆர்த்தி தெரிவித்துள்ளது தற்போது கோலிவுட்டில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.