அந்த நடிகை யாருன்னே தெரியாது.. அதை நிரூபிக்கட்டும்.. பாலியல் புகார் குறித்து ரியாஸ் கான் விளக்கம்..

அந்த நடிகை யாருன்னே தெரியாது.. அதை நிரூபிக்கட்டும்.. பாலியல் புகார் குறித்து ரியாஸ் கான் விளக்கம்..

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கையில், மலையாள சினிமாவில் ஏற்படும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த செய்திகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்த நடிகை யாருன்னே தெரியாது.. அதை நிரூபிக்கட்டும்.. பாலியல் புகார் குறித்து ரியாஸ் கான் விளக்கம்.. | Riaz Khan Explains About Complaint Of The Actress

அந்தவகையில் மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் தொலைபேசி வாயிலாக தகாத உறவுக்கு அழைத்தார் என்றும் தனது தோழிகளையும் ஏற்பாடு செய்து தருமாறு ரியாஸ் கான் கேட்டதாகவும் நடிகை ரேவதி சம்பத் புகாரளித்திருந்தார்.

இதுபற்றி கேள்விப்பட்ட ரியாஸ் கான், ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் அந்த நடிகை தனக்கு யார் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார். அந்த பேட்டியில், அந்த நடிகையை யார் என்றே தெரியாது, இப்போதுதான் டிவியில் பார்க்கிறேன். நான் எப்போது பேசினேன், எந்த வருஷத்தில், எந்த மாதத்தில் பேசினேன் என்று சொல்ல சொல்லுங்கள்.

அவர்களுக்கு எதாவது ஒரு அநீதி நடந்திருக்கலாம், அதுக்கு நியாயம் கிடைக்கட்டும். போறப்போக்கில் அப்பாவிகளை கோர்த்துவிடக் கூடாது. நேற்று முன் தினம் அந்த பெண், எனக்கு இப்படி ஆனது என்று கூறும் போது Adichu keri va டயலாக் இருக்கும் படத்தில் நடித்த ஒருவரும் என்னிடம் அப்படி பேசினார் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார்.

அந்த படத்தில் நடித்த ஒருவர் என்று கூறும்போது என் பெயர் அப்போது தெரியாதா?. நான் பேசினேன் என்று அதை அவர் நிரூபிக்கட்டும். இந்த நேரத்தில் ஏன் இப்படி பேசினார்கள் என்று அந்த பெண்ணைத்தான் கேட்கவேண்டும். நான் தப்பு செய்தால் தானே பயப்படணும், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைப்பற்றி விவரமாக தெரிந்துவிட்டு அவர்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES