சூர்யா வீட்டு வாசப்படி மிதிக்காத ஜோதிகா!! பிரபலம் கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..

சூர்யா வீட்டு வாசப்படி மிதிக்காத ஜோதிகா!! பிரபலம் கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஜோதிகா, வாலி படத்தின் சோனா ரோலில் நடித்திருந்தார். அந்த சிறு கேமியோ ரோலுக்கு பின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகினார். அந்த படத்தில் ஆரம்பித்து தொடர்ந்து இருவரும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். இருவரின் கெமிஸ்ட்ரி அதிகரிக்க அது காதலாக மாறியது.

பல எதிர்ப்புகளுக்கு பின் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2006ல் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்ந்து வந்தார். அதன்பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ஜோதிகா, தன் மாமனார் சிவக்குமார் வீட்டைவிட்டு மும்பையில் குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதற்கேற்ப பல கோடி செலவில் பங்களா வாங்கி அங்கேயே செட்டிலாகியிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா சென்னை தி. நகரில் பல கோடி செலவில் பிரமாண்ட வீட்டினை கட்டியிருக்கிறார். ஆனால் நடிகை ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தால், சூர்யா வீட்டில் தங்குவது கிடையாதாம்.

பிரபல நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குகிறாராம். அது ஏன் என்று தெரியவில்லை, ஏற்கனவே மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரே என்று சினிமா விமர்சகர் அந்தணன் சமீபத்திய வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES