அங்கு அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்த அம்மா.. VJ அர்ச்சனா கூறிய பகீர் தகவல்..!

அங்கு அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்த அம்மா.. VJ அர்ச்சனா கூறிய பகீர் தகவல்..!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழும் VJ அர்ச்சனா தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளராக 2002-ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர்.

இவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர். மேலும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்குகின்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த கூடிய இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களை செய்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

வடநாட்டில் பிறந்து வளர்ந்த இவர் தனது கல்லூரி படிப்புக்கு பின்னர் தமிழகத்தை நோக்கி வந்திருக்கிறார். மேலும் இவர் 2002-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியில் சிட்டிபாபு உடன் இணைந்து தொகுப்பாளினியாக இருந்ததை அடுத்து சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இளமை புதுமை, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்ற இவர் திருமணத்திற்கு பிறகு ஊடக வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு சில காலம் சின்னத்திரையில் தடை காட்டாமல் இருந்தார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தற்போது பணியாற்றி வருகிறார். அதோடு தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

சின்னத்திரை வெள்ளி திரையில் கிடைத்த பிரபலத்தை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசும் போது தனது அம்மாவை பற்றி பல்வேறு வகையான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்படி பகரும் போது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்றினை சொல்லியது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விஷயம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த விஷயமானது தன்னுடைய தங்கை அனிதா ஒரு முறை ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்குவதற்காக என்னுடைய அம்மாவிடம் ரிப்போர்ட் கார்டை நீட்டினார். அப்போது துணி தேய்த்து கொண்டிருந்த என்னுடைய அம்மா அப்பாவிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் படி கூறினார். 

ஆனால் அப்பா  வெளியே சென்று விட்டார் என சொல்ல அப்படியா என்று ரிப்போர்ட் கார்டை வாங்கி பார்த்துவிட்டு துணி தேய்த்து கொண்டிருந்த அயன் பாக்ஸை எடுத்து என்னுடைய தங்கை அனிதாவின் கையில் சூடு போட்டார் என்னுடைய அம்மா.

சிறு தவறு செய்து விட்டால் கூட சிக்கெடுக்கும் சீப்பை கொண்டு கை விரல்களில் உள்ள முட்டியில் பயங்கரமாக அடிப்பார். 

அதன் பிறகு மொட்டை வெயிலில் சிமெண்ட் தரையில் முட்டி போட சொல்லுவார். இப்படி பல கொடுமைகளை எங்கள் அம்மா செய்திருக்கிறார்.

அந்த அளவுக்கு கொடுமை செய்த எங்களுடைய அம்மாவுக்கு ஒரு முறை முட்டி ஆபரேஷன் செய்யப்பட்டது. அப்போது வலியால் துடித்தார். அந்த சமயத்தில் என்னுடைய தங்கை அனிதா பார் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று என்னிடம் வேதனையுடன் கூறினாள்.

 எனக்கும் அந்த வேதனை இருந்தது. ஆனால், அப்போது கூட.. இதெல்லாம் கர்மா நம்மை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி இருப்பார் வெயிலில் முட்டி போட வைத்தார்கள். தற்போது முட்டி ஆபரேஷன் செய்வதற்காக படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES