காசுக்காக அந்த மாதிரி விஷயத்தை செய்தேன்!! பிரபல நடிகை வேதனை..

காசுக்காக அந்த மாதிரி விஷயத்தை செய்தேன்!! பிரபல நடிகை வேதனை..

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கனி குஸ்ருதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடபட்டு விருதுகளை அள்ளி சென்றது.

முன்னதாக கனி குஸ்ருதி நடித்த பிரியாணி படத்திற்கு இவருக்கு கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.பிரியாணி திரைப்படம் விருதுகளை தட்டி சென்றாலும் முஸ்லிம்களுக்கு எதிரான கதைக்களம் என்ற விமர்சனமும் பெற்றது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கனி குஸ்ருதி, பிரியாணி படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், பிரியாணி படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன். என்னிடம் பணம் இல்லை என்று இயக்குனரிடம் சொன்னேன். எனக்கு சம்பளமாக 70,000 ரூபாய் கொடுத்தார். அந்த எனக்கு பெரிய தொகை. அதனால் தான் நடித்தேன் என்று கனி குஸ்ருதி கூறியுள்ளார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES