என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம்!! மகள் முன்பே கொந்தளித்து பேசிய ரேகா நாயர்..

என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம்!! மகள் முன்பே கொந்தளித்து பேசிய ரேகா நாயர்..

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பயில்வானை அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அடிக்கவில்லை, ஆனால் ஷூவை கழட்டினேன், அவர் ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ரேகா.

சமீபத்தில் தன் மகளுடன் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த சமூகத்தில் நடப்பதை பார்த்து என் மகளிடம் ஒன்று கூறுவேன். என்ன நடந்தாலும் என்னிடம் ஓப்பனாக சொல்லிவிடு. எதுவாக இருந்தாலும். ஒருத்தனை காதலித்தால் என்னிடம் சொல், அவனை பற்றி விசாரித்து அவன் நல்லவாக இருந்தால் ஓகே, கெட்டவனாக இருந்தால் கட் பண்ணிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இங்கே நல்லது பண்ண போனால் நமக்கு தான் பிரச்சனையாகிவிடுகிறது. இன்று வரை விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். அவளுடைய குடும்பம் கூட கோர்ட்-க்கு போவதை நிறுத்திவிட்டார்கள், நான் போய்ட்டே இருக்கிறேன். ரோட்டில் இந்த சமுதாயத்தில் செத்து கிடக்கும் போது உதவின்னு பண்ணப்போனால், நாம் தான் பாவிகளாகி விடுகிறோம். தண்டனைவாதிகளாகி விடுகிறோம். இந்த சமுகம் இன்னும் மாறவே இல்லை.

எனக்கு வலிக்கிறது, எனக்கு வலிக்கிறது என்று அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை என்று இங்கே சொல்கிறார்கள். அப்போது அமைதியாக இருந்தால் கெட்டப்பெண் என்கிறார்கள். ஆமாம் நான் கெட்டப்பெண் தான், எனக்கு உங்களுடைய பொண்ணாடையோ, பூமாலையோ, நல்ல அங்கீகாரமோ வேண்டாம். எந்த பத்தினிக்கும் மெரினா பீச்சில் சிலை வைத்ததே கிடையாது. என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம். எனக்கு  அது கவலையே கிடையாது என்று ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES