8-வது படிக்கும் போதே ஜிவி பிரகாஷுடன் காதல்.. விஜய் மனைவி சங்கீதா சொன்னது!! சைந்தவியின் எமோஷ்னல் த்ரோபேக்...

8-வது படிக்கும் போதே ஜிவி பிரகாஷுடன் காதல்.. விஜய் மனைவி சங்கீதா சொன்னது!! சைந்தவியின் எமோஷ்னல் த்ரோபேக்...

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிர்ச்சி கொடுத்து வரும் செய்தி என்னவென்றால் ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் பிரிவு. மிகப்பெரியளவில் பேசப்பட்டு வரும் இவர்களின் பிரிவு செய்தி பற்றி பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தேவையில்லாத கருத்துக்களை கூறுபவர்களை கண்டித்து கூட ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிக்கையை வெளியிட்டனர்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் சைந்தவி 8 ஆம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஜிவி பிரகாஷை காதலிக்க துவங்கியதாக்வும் 24 வருட பழக்கம். காதலிக்கும் போது இருவரும் தனியாகவே போனதில்லை என்றும் நண்பர்களோடு தான் போவோம் என்றும் கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சைந்தவி, தெய்வத்திருமகள் படத்தில் விழிகளில் ஒரு வானவில் என்ற பாடலை பாடியதற்காக நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பாராட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அதன்பின் சைந்தவிக்கும் சங்கீதாவுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியதாம். பின் விஜய்யின் தலைவா படத்தில் யார் இந்த சாலை ஓரம் பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடியிருக்கிறார்.

அதற்கு விஜய் மனைவி சங்கீதா சைந்தவியை பாராட்டினாராம். தலைவா படத்திற்கு பின் தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி காதல் எல்லோருக்கும் தெரிவந்திருக்கிறது. அப்படி 24 ஆண்டுகளாக இருந்த காதலில் இருந்து பிரிகிறார்கள் என்று கூறியதும் பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES