நீங்கள் இருட்டில் செய்யவேண்டியதை.. முதலிரவு பற்றிய கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ரச்சிதா ராம்

நீங்கள் இருட்டில் செய்யவேண்டியதை.. முதலிரவு பற்றிய கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ரச்சிதா ராம்

கன்னட சினிமாவில் 2013ல் வெளியான புல்புல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா ராம். பரதநாட்டிய கலைஞராக பல படங்களில் நடித்த ரச்சிதா ராம், நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ், அண்ணா போன்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகை நித்யா ராமின் தங்கையாவார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரச்சிதா ராம், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரச்சிதா ராம் Love You Rachchu என்ற படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது பற்றிய கேள்விக்கு அதிர்ச்சிகரமான ஒரு பதில் அளித்தது அனைவரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.

Love You Rachchu படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளீர்கள், அதை பற்றிய உங்களின் கருத்து என்ன என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு ரச்சிதா ராம், இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து எல்லோரும் திருமணமானவர்களாகவும் திருமணம் செய்யப்போகிறவர்களாகவும் இருப்பார்கள்.

திருமணம் முடிந்து முதலிரவு அறையில் என்ன செய்தீர்கள்?. நீங்கள் இருட்டில் செய்யவேண்டியதை நாங்கள் வெளிச்சத்தில் செய்கிறோம் என்றும் நாங்கள் வெளிச்சத்தில் செய்ததை நீங்கள் இருட்டான தியேட்டரில் அமர்ந்து பார்க்கப்போகிறீர்கள். இதில் குறை கண்டுப்பிடிக்க என்ன இருக்கிறது என்று கூச்சமின்றி பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES