திருமண வாழ்கையில் ஏற்பட்ட சலிப்பு.. பிரசன்னாவுடன் சண்டை!! குடும்ப ரகசியதை போட்டுடைத்த சினேகா

திருமண வாழ்கையில் ஏற்பட்ட சலிப்பு.. பிரசன்னாவுடன் சண்டை!! குடும்ப ரகசியதை போட்டுடைத்த சினேகா

மலையாள மொழி படங்களில் நடித்து வந்த சினேகா, என்னவளே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ எனப் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சினேகா, நானும் பிரசன்னாவும் நண்பர்களாக தான் முதலில் இருந்தோம். அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பின் பிரைவசிக்காக நானும் அவரும் கொஞ்ச நாள் தனி தனி வீட்டில் இருந்தோம்.

ஆரம்பத்தில் வாடைக்கு வீடு கிடைக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கு நாங்கள் வீடு கொடுப்பதில்லை என சொல்லி விட்டார்கள். அதனால் நான் என்னுடைய வீட்டுக்கு சென்றுவிட்டேன். பிரசன்னா அவருடைய வீட்டில் இருந்தார். கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் பிரிந்து இப்படி தான் இருந்தோம்.

குழந்தை பிறந்த பிறகு கவனம் எல்லாம் அங்கே சென்றுவிட்டது. தற்போது குழந்தைகளை நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை வந்து இருக்கிறது.

எங்கள் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது என்பது உண்மை தான். அப்படியான நேரத்தில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். கடந்த கால நினைவுகளை பற்றி அப்போது பேசுவோம். மீண்டும் எங்களுங்கு இடையே spark வந்துவிடும். எனக்கும் பிரசன்னாவுக்கு இடையே சண்டை அடிக்கடி வரும்.

நாங்கள் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் சண்டை முடிந்த பிறகும் நாங்கள் இவருடைய கருத்தையும் புரிந்துகொள்வோம் என்று சினேகா பேட்டியில் தெரிவித்து உள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES