எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளும் சீரியல் நடிகைகளும் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள்,பாலியல் தொல்லைகள் அனுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் பெரிய நடிகைகளாக இருந்தாலும் பொதுவெளியில் பிரபலமான நடிகையாக இருப்பதாலும் இவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளும் தொந்தரவுகளும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
நடிகைகளுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களை சற்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இப்படித்தான் பெண்கள் பல அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளில் இருந்தும் பாலியல் தொல்லைகள் இருந்தும் தங்களை ஒவ்வொரு நாளும் தப்பித்துக் கொண்டு பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படிதான் நடிகை பனிமலர் சீரியல் மூலம் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான பணிமலர் தனக்கு நடந்த கொடுமை விஷயம் ஒன்றை வெளிப்படையாக பகிர்ந்து பேசி உள்ளார்.
அதில் அவர் மிகுந்த கோபத்தோடு வக்கிரம் பிடித்த ஆண்களைப் பற்றி வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, திருநெல்வேலியில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக என்னுடைய டீமிடம் பேசியுள்ளார்கள். அப்போது ஒரு நாளைக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவாங்க? என்று கேட்டுள்ளார்கள்.
மேலும், ஒரு லட்ச ரூபாய் தர்றோம். அவங்கள வந்து தங்க சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்டதும் என் டீம் அவர்களை பிளாக் செய்து விட்டார்கள்.
பெண்களுக்கு இப்படிதான் நிறைய சீண்டல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது.
இது தவிர, சிலருக்கு நேரலையில் நள்ளிரவில் வீடியோ கால்கள், தேவையில்லாத மெசேஜ்கள் பல வருகின்றன.
உங்க வீட்டு பெண்களில் மூத்த பெண்கள் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன ஆகும்?
கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இப்படித்தான் நடக்கும் என்கிற அறிவு வேண்டாமா..
இன்னும் சிலர், சமூக வலைதளங்களில் வந்து அதை காட்டு, இதை காட்டு, போட்டோ அனுப்பு என வெறி பிடித்த நாய்கள் போன்று திரிகிறார்கள்.
அப்படி விரக்தியாக இருந்தீர்கள் என்றால், இதை செய்வதற்கென்றே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் தாராளமாக பணம் கொடுத்துப் போங்கள். அது உங்கள் இஷ்டம்.
இல்லை உங்களுக்கு வக்கு இருந்தால் முறையாக காதல் செய்யுங்கள். திருமணம் செய்யுங்கள். எதையாவது செய்யுங்கள்.
ஊரில் இருக்கும் பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள். பொது தளத்தில் வந்து அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
டெக்னாலெஜி வளர்ந்திருக்கும் வேகத்தில் பெண்களின் பாதுகாப்பும் வளர்ந்துவிட்டது. எனவே உங்களை தூக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
இதுபோன்ற வக்கிரம் பிடித்த ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என பனிமலர் மிகுந்த கோபத்துடன் பேசியிருக்கிறார்.