ஜெயம் ரவி - நயன்தாரா படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்: ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவி - நயன்தாரா படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்: ரிலீஸ் எப்போது?

’தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வரும் ‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது என்றும் அவைகளில் பெரும்பாலானவை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இயக்குனர் அகமது இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘என்றென்றும் காதல்’, ’மனிதன்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு முதல் பாதியில் வெளியிட திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் காரணமாக படத்திற்கு படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES